• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

ByA.Tamilselvan

Sep 1, 2022

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.