சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பொது தீட்சை அவர்களிடம் தேசியக்கொடி வழங்கினார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று சாமி தரிசன்ம செய்தார்.அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்படி கோயில் தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஹேம சபேஸ தீக்ஷிதரிடம், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயிலில் தேசியக்கொடியை ஏற்றிவதற்காக வழங்கினார். சிதம்பரம் கோயிலில் ஆண்டு தோறும் இரண்டு தினங்கள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கிழக்கு கோபுரத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறுகிறது என்பது சிறப்பு.