இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள ஆதானியின் சொத்துக்கள் உயர்ந்து வரும் நிலையில்இந்தியாவில்ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஃபோர்ப்ஸ் இதழ் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி உலக அளவில் 4 வது இடத்தை பிடித்தார்..இன்னொரு புறம் வேர்ல்டு பாவர்ட்டி கிளாக் என்ற அமைப்பு வெளியிட்ட பட்டியலில் அதிக எழைகள் வாழும் நாடுகள் பட்டியலில் நைஜீரியாவை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனை விமர்சிக்கும் இந்த கார்ட்டூன் இணையத்தில் வைரலாகி வருகிறது