• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு… எடப்பாடி பழனிசாமி மீது போட்ட வழக்கு இன்று விசாரணை..

Byகாயத்ரி

Jul 26, 2022

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த போது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு 3 மாத காலத்துக்குள் அதை முடிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று (ஜூலை 26) விசாரிப்பதாக அறிவித்துள்ளனர்.