• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நல்லாசிரியர் விருது வழங்கிய முதல்வர்

By

Sep 5, 2021

ஆசிரியர் திணைத்தையொட்டி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 389 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ வழங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின்.
நாடு முழுவதும் இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றும் 389 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
2020-2021 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய 389 ஆசிரியர்களுக்கு விருது தருவதன் அடையாளமாக சென்னையை சேர்ந்த 15 பேருக்கு ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.