• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

விஜய்காந்த் நடிக்கிறார் என்பது உண்மை – விஜய் மில்டன்

விஜய் மில்டன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன்! இந்தப் படம் குறித்தும், விஜய் ஆண்டனி, விஜய்காந்த், சரத்குமார் உள்ளிட்டவர்கள் குறித்து விஜய் மில்டன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்..

நடிகர் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது படங்கள் ரிலீசுக்காக வரிசை கட்டி வருகின்றன. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனிடையே விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகியுள்ளார் மேகா ஆகாஷ். மேலும் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்..

இந்நிலையில் படம் குறித்தும் அதன் நடிகர்கள் குறித்தும் விஜய் மில்டன் மனம் திறந்துள்ளார்.

தானும் விஜய் ஆண்டனியும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருவதாகவும் தான் கதை சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்ததால் உடனடியாக நடிக்க சம்மதித்ததாகவும் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். மேலும் எதுவுமே இல்லாத மனிதனுக்கு கிடைக்கும் உறவுகள் இந்தப் படத்தின் கதைக்களமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி ஆரம்ப காலத்தில் இருந்ததைவிட தற்போது நடிப்பில் மிகவும் தேறிவிட்டதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படம் அவருக்கு மேலும் சிறந்த அடையாளத்தை தரும் என்றும் கூறியுள்ளார். சரத்குமார் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல படத்தில் நடிகர் விஜய்காந்த் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைதான் என்றும் விஜய் மில்டன் கூறியுள்ளார். படத்தில் அவருக்கு பெரிய மனிதர் கேரக்டர் என்றும் அவரை திரையில் மீண்டும் பார்க்க தனக்கு மிகவும் ஆசை என்றும் தெரிவித்துள்ளார். அவரும் நடிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

காலமும் அவரது உடல்நிலையும் ஒத்துழைத்தால் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அதிகமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதாகவும் மனதை அசைத்துப் பார்க்கும் அழகான அனுபவத்தை இந்தப் படம் தரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.