நாடாளுமன்ற மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது!.
குடியரசு தலைவர் உரையில், கல்வி தொடர்பாக பேசுகையில், ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ திருக்குறளை மேற்கோள்காட்டினார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்
இந்நிலையில், மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து,மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். மேலும், ஆய்வறிக்கை குறித்த தகவல் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.