புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி உட்பட்ட பகுதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .மு.அருணா, அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் அவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன் அவர்கள்,மாவட்ட உடற்கல்வி ஆய்வர் .தங்கராஜ் அவர்கள், மாவட்ட இளையோர் அலுவலர் திரு. ஜோயல் பிரபாகர் அவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள், வீரர் வீராங்கனைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









