• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ரீல்ஸ் சூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பெரியார் பேருந்து நிலையம்…,

ByKalamegam Viswanathan

Jun 22, 2026

மதுரை மாநகரின் பெரியார் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பெண்கள் பயணிகளாக வந்து செல்கின்றனர்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேருந்து நிலையமாக மாறியதால் இந்தப் பகுதிகளில் இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாக தங்களை ஹீரோக்களாக காட்ட முயற்சிக்கும் ஏராளமான இளைஞர்கள் கையில் செல்போன்களுடன் பள்ளி கல்லூரி மாணவிகள், பெண் பயணிகளை வீடியோ எடுத்துவருகின்றனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் இளைஞர்கள் தினசரி மாணவிகளை பாலோ அப் செய்து ரீல்ஸ் வீடியோ எடுக்கிறோம் என்ற பெயரில் மாணவிகளிடம் தங்களது செல்போன் நம்பருக்கு பதிலாக இன்ஸ்டா ஐடியை கொடுத்து நட்பு காதலை உருவாக்கி மாணவிகளை தவறான வழிக்கு நடத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து மாணவிகள் கேட்டாலோ புகார் அளிக்க சென்றால் Frank பண்ணுவதற்காக எடுத்தோம் என கூறி திசை திருப்புகின்றனர்.

மேலும் இளைஞர்கள் சிலர் பெண்கள், மாணவிகளிடம் பேசுவதற்காகவும், சில நிறுவனதங்களை விளம்பரம் செய்வது என இன்ஸ்டா ரீல்ஸ் சூட்டிங் ஸ்பாட்டாக பெரியார் பேருந்து நிலையம் மாற்றி அத்து மீறலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேபோன்று இன்ஸ்டா கிராம் பக்கம் ஒன்றில் பெண் ஒருவரை பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியும், பஸ் ஸ்டாண்டுக்குள் ஆண் ஒருவர் துரத்தி ஓடுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பெண் ஆடையை அணிந்து ஆண் ஓடுவது போல மாற்றி டாட்டோ நிறுவனத்திற்கான விளம்பரம. வெளியிட்டுள்ளனர்.

இதற்கு சமூகவலைதளங்கள் மூலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூகவலைதளவாசிகள் பொண்ணுங்கனா துரத்துவங்களா!! என்ன மாதிரியான மன நிலை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கமெண்ட் செய்துவருகின்றனர்.

இதேபோன்று பெண்களை குறிவைத்தும், கேலியாக பேசுவதும் என பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி என பேருந்து நிலையத்தை ரீல்ஸ் சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவரும் ரீல்ஸ் இளைஞர்கள் கும்பல் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பி விடுவது மீண்டும் வந்து தொந்தரவு அளித்துவருகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை குறிவைத்து இன கவர்ச்சியை உருவாக்கும் வகையில் வீடியோக்களை எடுத்து மாணவிகளை திசைமாற்று கருவிகளாய் மாற்றும் இன்ஸ்டா ரீல்ஸ் கும்பலை தடுத்து நிறுத்தி சிங்கப்பெண் சிறப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த. வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.