“ஆக்கிரமிக்க நினைப்பவர்களின் தலைமையகங்களை சாம்பலாக்க தயங்க மாட்டோம்”-எனஅமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிப் பார்க்க முயன்றால், எங்கள் அடுத்தகட்ட பதிலடி, அனைத்து சட்டங்கள், எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும்.
எங்கள் பகுதியை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள், அதற்கு உதவுபவர்களின் தலைமையகங்களை சாம்பலாக்கவும் எங்களது படைகள் தயங்காது.
கெஷம் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பக்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



