சாத்தூர் அருகே உள்ள தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சார்பு ஆய்வாளர் விஜயா தலைமையில் பக்தர்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. காவல் உதவி செயலி மூலம் எவ்வாறு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தங்களது தொலைபேசிகளில் காவல் உதவி செயலை பதிவிறக்கம் செய்து எவ்வாறு பயன்படும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.






