• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு

Byமதி

Nov 30, 2021

அரசு ஊழியர்களுக்கு கோவிட் போனஸாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஊதிய உயர்வை அடுத்த 2 ஆண்டுகள் வரை வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.

ஜெர்மனியில் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 3.5 மில்லியன் பேர். இவர்கள் அனைவருக்கும் வரி இல்லாத ஊதிய உயர்வாக 1,300 யூரோக்கள் (அதாவது இந்திய பணத்தில் ரூ.1,10,338.71) தொகையை ஒவ்வொரு அரசு ஊழியரும் பெறுவார். இந்த அறிவிப்பு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இது செல்லுபடியாகும் எனவும் அறிவித்துள்ளது.

அரசு பொது மருத்துவமனைகள், பள்ளிகள், காவல்துறை, தீயணைப்பு சேவைகளில் பணிபுரியாற்றுவோர், உயர்மட்ட அதிகாரிகளுக்கு 1,300 யூரோக்களும், சில மருத்துவ மற்றும் பராமரிப்புத் தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் பயிற்சி பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு 650 யூரோக்கள் வரியில்லா போனஸாக வழங்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.