அலங்கார உபகார மாதா கோயிலின் திருகொடியேற்றம் நடைபெற்றது. அலை கடல் போன்ற மக்கள் கூட்டம் தரிசனம் செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமம் ஒவ்வொன்றிலும் வான் தொடும் சிலுவை தாங்கிய தேவாலயங்கள் வரிசையில், கன்னியாகுமரியில் உள்ள 110_ ஆண்டுகள் பழமையான அலங்கார உபகார மாதா கோயிலின் 10_ நாள் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றம் இன்று மாலை (டிசம்பர்_6) பங்கு தந்தை அருட்பணி உபால்ட் தலைமையில், உதவி அருட்பணியாளர்கள், அருட் கன்னியர்கள், தேவாலயம் நிர்வாக குழு, ஊர் மக்கள் ஒன்று கூடி புனித அலங்கார உபகார மாதா கோயிலின் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.



திருக்கொடியேற்றத்தை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. எதிர் வரும் 15_ம்தேதி இரவு தேரோட்டத்தை தொடர்ந்து 16_ம்தேதி(10_ம்) திருவிழா காலையில் திருப்பலிக்கு பின் தங்கத் தேர் ஓட்டம் நடைபெறவுள்ளது.






