• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதல்

ByKalamegam Viswanathan

Nov 28, 2024

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு

மதுரை மாநகரின் மையப்பகுதியில் நள்ளிரவில் போதையில் இரண்டு யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவரது தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகர் பகுதியான நேதாஜி சாலையில் அமைந்துள்ள திண்டுக்கல் முருகன் கோவில் அருகே உள்ள ஜீஸ் கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் தலையில் காயதுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து திடீர்நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் உடலை கைப்பற்றி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டாரா..? அல்லது போதையில் தலையில் அடிபட்டு உயிரிழந்து உள்ளாரா..? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இரண்டு யாசகர்கள் ஒருவருக்கு ஒருவர் போதையில் தகராறு ஈடுபட்டதும் அதில் ஆத்திரத்தில் அருகில் உள்ள பட்டிய கல்லை எடுத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இறந்த நபர் மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயது மாயக்கண்ணன் என்பதும் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள், வீதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

மாயக்கண்ணனை கொலை செய்த மற்றொரு யாசகர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி நூற்றுக்கணக்கான யாசகர்கள் தினமும் கோவிலுக்கு வருகை தரும் பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் அங்கு சுற்றியுள்ள வீதிகளில் யாசகம் பெற்று பிறப்பு நடத்திவரும் நிலையில் நேற்று நள்ளிரவு மதுபோதையில் நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜூஸ் கடை முன்பு இரண்டு யாசகர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பாத்திரத்தில் மற்றொரு யாசகம் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.