தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கொட்டக்குடி ஊராட்சியில் புலயர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா 28 பேருக்கு வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகாவில் தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும். பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கொட்டக்குடி ஊராட்சி வசிக்கும் புலயர் இன மக்கள் 28 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.
கொட்டங்குடி கிராமத்தில் கடந்த 1990 ஆண்டு முதல் வீட்டடி பட்டா இல்லாமல் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 34 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும். பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கொட்டக்குடி ஊராட்சியில் புலயர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா 28 பேருக்கு தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஷஜீவனா வழங்கினார்.