• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பேரழகா!

தடுக்க எத்தணித்தாலும்
மறுக்க முடியாத ஆனந்தத்
தருணங்கள்…

கொடுக்க நினைத்தாலும்…
எட்டிடாத இடைவெளியாய்
தொலைவுகள்;

நிலவுக்கும் பூமிக்கும்
இடையேயான உறவிது…

ஆனாலும் ஒன்றையொன்று
அழகாக்கிடத் தவறுவதில்லை!

தூரமிங்கே தொலைவுகளுக்கே;
தொலையாத நியாபகங்களுக்கு
என்றுமில்லை….
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்