• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து

குமரி மாவட்டத்தில் கடந்த 15_ம் தேதி முதலே மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தினமும் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று காலை, கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வழக்கம் போல் இன்று காலை படகு போக்குவரத்து தொடங்கியது. இடையிடையே மழைபெய்வதும், நிற்பதும் போன்ற நிலையில் நண் பகல் போன்று கடலில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில், கடலில் உள்ள படகு துறையில் படகை நிறுத்தி சுற்றுலா பயணிகளை இறக்க முடியாத அளவுக்கு அலையின் வேகம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகளுடன் கரைக்கு படகு திரும்பிய நிலையிலும், மழையின் காரணமாக படகு போக்குவரத்து இன்று நிறுத்தப்பட்டது.