• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாரான நிலையில் தென்காசி மாவட்ட தீயணைப்பு வீரர்கள்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக மீட்பு பணிகள் ஈடுபட தயார் நிலையில் உள்ள மீட்புபடையினர்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் சுரண்டை ஆலங்குளம் ஆகிய ஏழு நிலையங்களிலும் மழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிக்கு தயார் நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் கமாண்டோ வீரர்கள் மற்றும் அனைத்து வாகனங்கள் மீட்பு கருவிகள் லைப் ஜாக்கெட் லைபாய் ரப்பர் படகு மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில்எவ்வித மழை வெள்ளத்தையும் எதிர்கொள்ள மாவட்ட அலுவலர் கவிதா அவர்களின் ஆலோசனை மற்றும் உத்தரவின் பெயரில் தயார் நிலையில் உள்ளது.