• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும் தபால் ஓட்டுக்கு அனுமதி வேண்டும்- ஆட்சியர் அலுவலகத்தில் மனு…

BySeenu

Mar 28, 2024

கோவை மாவட்டத்தில் 65-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90% பணியாளர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர்.

இந்நிலையில் தேர்தலின் போது வாக்களிக்க விடுப்பு எடுத்து சென்றால் பொது மக்களின் அவசர சேவை பாதிப்பு அடையும் என்பதால் விடுப்பு மறுக்கபடுவதாகவும் இதனால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் எனவே தங்களுக்கும் தபால் ஓட்டு வழங்க வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.