• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பின் போராட்டம் தொடர்ந்தால்.., அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை!

Byதரணி

Oct 24, 2023

தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பின் போராட்டம் தொடர்ந்தால், அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில்,

பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கத்தை மேற்கொள்வோம்.

ஆம்னி பேருந்துகள் ஆவணங்களை முறையாக வைத்திருந்து அபராதம் விதித்திருந்தால் தீர்வு காண நடவடிக்கை – எஸ்‌.எஸ்.சிவசங்கர்.

விதிமீறல் இருந்தால் நடவடிக்கை உறுதி – எஸ்.எஸ்.சிவசங்கர்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 4 நாட்களில் சுமூகமாக சொந்த ஊர் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பவும் இதேபோல் பேருந்துகள் இயக்கம்.

கடந்த 2 மாதத்தில் குறிப்பிட்ட சில பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகாருக்கே நடவடிக்கை எடுக்கப்படும்.