விருதுநகர் மாவட்டத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் நாளை முதல் 24-ஆம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.