ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இந்த படம் விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைக் குவித்தது. நகைச்சுவை நடிகர்-ஹீரோ என பயணித்துவரும் யோகி பாபுவுக்கு காலத்திற்கும் பெருமைப்படக்கூடிய படமாக அமைந்தது ‘மண்டேலா’.
சினிமாத்துறையினருக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பவுள்ள படத்திற்காக தற்போது இந்தியாவிலிருந்து 14 படங்கள் தேர்வாகியுள்ளன.
அதில், தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் ‘மண்டேலா’ என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலனின் ஷெர்னி படமும், ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த ‘நாயட்டு’ படமும், பரிந்துரைப் பட்டியலில் உள்ளன. இந்தப் 14 படங்களைப் பார்த்துவிட்டு ஒரு படத்தை தேர்வு செய்து ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்புவார்கள். இதற்கான, திரையிடல் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது.
- அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள், பிள்ளை பிடிக்கும் வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் தாக்கு.,
- மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்..,
- கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…
- மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு..,
- பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
- புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..,
- ஏழாயிரம் பண்ணையில் ஆசிரியர் ஜேசுராஜா நினைவாக மினி மாரத்தான் போட்டி..,
- கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி..,
- தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா…





