தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் குடலிறக்கம் பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உடலுறுப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறியும் எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இந்தச் சிகிச்சை முடிந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.