• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

இறந்த தம்பதியரின் உடல் தமிழகத்திற்கு வர, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்..!

ByKalamegam Viswanathan

Jul 4, 2023

கத்தாரில் இறந்த மதுரை தம்பதியினரின் சடலங்களை தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை பி.பி சாவடியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி திருநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி ஆகியோர் ஜூன் 28, 2023 அன்று, தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கத்தாரில் ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தார்கள். அவர்களின் உயிர் இழப்பால், துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பங்களையும், ஒட்டுமொத்த சமூக உறவுகளையும் சிதைத்துவிட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் தொடர்சியாக, இறந்த தம்பதியினரின் சடலங்களை தமிழகத்திற்கு கொண்டு வர உதவுமாறு, சென்னையிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலன்புரி ஆணையரிடம், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் கடிதத்தின் நகல் உங்கள் குறிப்புக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 29.06.2023 தேதியிட்ட குறைகள் ஐடி: QT0MTR108545423 உடன், வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை மேலாண்மை அமைப்பில், திருப்பி அனுப்புவதற்கான முறையான கோரிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசயத்தில் அமைச்சகம் தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நம்புகிறோம்.