• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

“5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம்”-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ByA.Tamilselvan

Jun 11, 2023

சேலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“10 ஆண்டு கால அதிமுக ஆட்சியால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்””எனது வெளிநாட்டு பயணத்தால் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளன””தமிழ்நாட்டை பாழ்படுத்தும் கூட்டம் எனது வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து வருகிறது””மக்கள் திட்டங்களுக்கே நேரம் சரியாக இருப்பதால் யாருக்கும் பதிலளிக்க விரும்பவில்லை”- .குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளோம்;
நானும் டெல்டாக்காரன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி; அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் திராவிடமாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது”சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன”
“சேலத்தில் புதிய கொலுசு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது””சேலத்தில் ஜவுளி பூங்காவுக்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன””சேலம் அம்மாபேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு”- அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.