நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரியம் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பின் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு மஹேந்திரன் தலைமை தாங்கினார்.
(1).01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகள் கடந்தும் கருத்துருவை சங்கங்களுக்கு அளித்து அதன் மீது பேச்சு வார்த்தை நடத்தி ஊதிய உயர்வை வழங்க கால தாமதமாக படுத்தும் மின்வாரிய நிர்வாகத்தையும் , தமிழக அரசையும் கண்டித்தும்,
(2). மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட கோரியும்,
(3).அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரியும்,
மத்திய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயளாளர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.