சத்தீஷ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வரும் பிப்ரவரி மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. இதற்கான முடிவு, கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடந்த வழிகாட்டும் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் 51 ஆண்டுகளுக்கு பிறகு, மறைந்த தலைவர் ஜெகஜீவன்ராமுக்கு பின்னர், முதல் முறையாக தலித் வகுப்பைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி தலைவர் பொறுப்பு ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறவரையில் கட்சி காரியங்களைக் கவனிப்பதற்காக 47 பேரைக் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைத்தார். இந்தக் குழுவில் சோனியா காந்தி, மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ஏ.கே. அந்தோணி, பிரியங்கா காந்தி, அபிஷேக் சிங்வி, அஜய் மக்கான், அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், டாக்டர் ஏ.செல்லக்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழிகாட்டும் குழுவின் முதல் கூட்டம், கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஷ்கார் முதல்வர் பூபேஷ் பாகல், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீரா குமார், அம்பிகா சோனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நடத்தி வருவதால், இந்தக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் வரும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாதி பகுதியில் கட்சியின் 85-வது மாநாட்டை சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக கட்சித்தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கட்சி முறைப்படி ஒப்புதல் அளிக்கும்.
வழிகாட்டும் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:- ராய்ப்பூரில் பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் 3 நாட்கள் நடைபெறுகிற காங்கிரஸ் மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. வழிகாட்டும் குழுவில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றியும் ஆராயப்பட்டது. ஜனவரி 26-ந் தேதி தொடங்கி 2 மாத காலத்துக்கு பிரமாண்டமான அளவில் கைக்கு கை பிரசாரம் என்ற தலைப்பில் பிரசார இயக்கம் நடத்தப்படும். இதன்படி, அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய தொகுதி அளவிலான பாதயாத்திரை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாகவந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய […]
- அழகின் அழகே குளிர்கால டிப்ஸ்..குளிர்காலத்திற்கான சிறந்த பராமரிப்பு குறிப்புகள் நீங்கள் வசிக்கும்இடம் மற்றும் ஆண்டின் எந்த மாதத்தை பொறுத்து குளிர்காலம் […]
- ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர்… அதிரடியாய் வெடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜிஅதிமுக நிறுவன தலைவர் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் […]
- தை தெப்பத் ஏழாம் நாள் திருவிழா திருப்பரங்குன்றம் முருகனுக்கு தீப தூப ஆராதனைதை தெப்பத் திருவிழா ஏழாம்நாள் இன்று இரவு அருள்மிகு சுப்பிரமணியசாமிக்கும், தெய்வானைக்கும் தீபாராதனை நடைபெற்ற காட்சி
- அனுமதியின்றி மரக்கடத்தல்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களை தொடர்ந்து அனுமதியின்றி […]
- அகில இந்திய மஜ்லிஸ் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு […]
- புதிய ஓய்வுதிய திட்ட எதிப்பு “கோரிக்கை மாநாடு” பிப்ரவரி 11ல் சென்னையில் நடக்கிறது.சென்னையில் நடைபெற உள்ள புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு கோரிக்கை மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 103:ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு குருவிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட […]
- குறள் 367:அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். பொருள் (மு.வ):ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் […]
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]