

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், உலகம் முழுவதிலும் இருந்து முதல் முறையாக ஒன்றிணைந்து சந்தித்துக் கொண்டனர். தாங்கள் படித்த பள்ளி அதில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்ய முடிவு செய்தனர்.
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் 1983 மற்றும் 84 ஆம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் பலர் மாநில மற்றும் மத்திய அரசு பணிகளிலும் ஆந்திரா கேரளா கர்நாடகா உட்பட இந்தியா முழுவதிலும் குறிப்பாக அமெரிக்கா சிங்கப்பூர் சவுதி அரேபியா போன்ற உலகில் பெரும்பாலான நாடுகளில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.தற்போது 50 முதல் 55 வயதை கடந்தும் தங்களது வாழ்க்கையில் மீன்சுருட்டி பள்ளியில் படித்த கல்வியே உயர்த்தியது, வெற்றியடைய செய்துள்ளது என்று பெருமைப்பட்டு 40 வருடங்களுக்கு முன் தங்களுடன் இணைந்து படித்த சிறு வயது நண்பர்களை காண பல வருடங்களாக ஏங்கிய நிலையில்.
தங்கள் கிராமத்திற்கு வரும்போது, நண்பர்களின் வீடுகளை தேடிச்சென்று அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து நண்பர்களின் முகவரி செல் நம்பரை பெற்று செல்போனில் தொடர்பை ஏற்படுத்தி கடந்த நான்கு வருடங்களாக சந்திக்க பல்வேறு வகையில் முயற்சி செய்தும் சந்திக்க முடியாத நிலையில். சவுதி அரேபியாவில் இருந்து பார்த்தி மலை ராஜ,சிங்கப்பூரிலிருந்து மணிவண்ணன், கேரளாவில் இருந்து சரவணன், சென்னையைச் சேர்ந்த கதிரவன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு,
ஒரு வழியாக பள்ளி திறந்த முதல் நாளில் பள்ளியிலேயே சந்தித்து தற்போதுள்ள ஆசிரியர்களை வாழ்த்தியும் படிக்கும் மாணவர்களிடம் தங்களது அனுபவங்கள் மற்றும் தாங்கள் குடும்பத்துடன் உயர்ந்த நிலைக்கு வர காரணம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி உலகில் எங்கு மூலையில் இருந்தாலும், அங்கிருந்து பறந்தோடி வந்தனர். இந்தியா முழுவதிலும் இருந்து வந்து, மீன்சுருட்டியில் ஒன்று சேர்ந்தனர்.ஆனால் தமிழக அரசு விடுமுறையை தள்ளி வைத்ததால் பள்ளி மூடி இருப்பதைக் கண்டு பள்ளியின் வாசலில் ஒன்று சேர்ந்து, பள்ளி மூடி இருப்பதால், தாங்கள் படிக்கும் காலத்தில் விடுமுறையின் போது சந்தித்து விளையாடி பொழுதைக் கழித்த விவசாய நிலம் பம்பு செட் தோப்பு பகுதியில். ஒன்று சேர்ந்து கலந்துரையாட முடிவு செய்து அனைவரும், தோப்புப் பகுதிக்கு சென்று தாங்கள் படிக்கும் காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தகவல்கள் ஆசிரியர்களிடம் அடி வாங்கியது, முட்டி போட்டது, பள்ளி மைதானத்தை சுற்றி வந்து தண்டனை பெற்றது, போன்றவைகளை பகிர்ந்து கொண்டனர் காலை முதல் மாலை வரை பகிர்ந்து கொண்டு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தாங்கள் சந்தித்தவைகள் அனுபவங்கள் மேற்படித்தவைகள், தற்பொழுது மாநில மத்திய அரசு பணிகள், இந்தியாவில் எங்கெங்கெல்லாம் கம்பெனிகளில் வேலை செய்து வருகின்றனர். சுய தொழில் செய்து வருவது, வெளிநாடுகளில் தாங்கள் வேலை செய்வது, சுய தொழில் செய்வது, குடும்பத்தினர் பற்றி பகிர்ந்து கொண்டு ஒன்றாக ஒருவருக்கு ஒருவர் உணவை பரிமாறி சாப்பிட்டு தொடர்ந்து அடுத்த முறை அனைவரும் நாம் படித்த பள்ளியிலேயே குடும்பத்துடன் ஒன்றிணைந்து சந்தித்துக் கொள்வது, ஆசிரியர்களை, மாணவர்களை சந்தித்து பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்வது, ஏழை எளிய மாணவர்கள் படித்து முடித்தவுடன் அவர்கள் விருப்பப்படி மேல்படிப்பை படிக்கச் உதவுவது என்று முடிவு செய்தனர்.
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
- தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்..!தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வைகுந்தம் … Read more
