• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் வளாகத்தில் 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி…

ByJeisriRam

Oct 28, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நான்கு பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தனது சகோதரன் மணி என்பவர் தங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்காமல் இருப்பது குறித்து வருவாய்த்துறைகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

வருவாய்த்துறையினர் மணி என்பவருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி, இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பூபதி, கண்ணாமணி, நாகலட்சுமி, லட்சுமி உள்ளிட்ட நான்கு பெண்களும் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திலிருந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.