அடிப்படை வசதி செய்து கொடுங்க கலெக்டர்…ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை
திருமங்கலம் தொகுதியில் பல்வேறு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ,மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். திருமங்கலம் தொகுதியில் உள்ள ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சியர்…
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு மிரட்டல்
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, காவல்துறை விசாரணையில் அது புரளி என தெரியவந்துள்ளது.மதுரை மாவட்ட கண்ட்ரோல் ரூம்-க்கு ஒருவர் தொடர்பு கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர…
ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லத் தடை
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், பலரும் தீபாவளியைக் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் சேர்ந்துக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.…
சென்னை பூர்விகா நிறுவனத்தில் ஐ.டி.ரெய்டு
செல்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் பூர்விகா நிறுவனத்தில் ஐ.டி.ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.செல்ஃபோன் விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வருவது பூர்விகா நிறுவனம். இந்நிறுவனம் 2004ல் தொடங்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியா முழுவதும் 400க்கும்…
பகலில் வெயில், மாலையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் எனவும், மாலையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.தென்மேற்கு பருவமழை முடிந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் வங்கக்கடல் பகுதியில் உருவான…
இந்திய வானில் அரிய வகை வால்நட்சத்திரம்
சூரிய மண்டலத்தில் அரிய வகை வால்நட்சத்திரம் ஒன்று சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்திய வான்வெளியில் தற்போது நுழைந்துள்ளது.சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமியில் பல ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் வால் நட்சத்திரம் ஒன்று…
சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில்…
முடிவுக்கு வந்த சாம்சங் ஊழியர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த சாம்சங் ஊழியர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார்…
கண்கள் திறந்த நீதிதேவதை
உச்சநீதிமன்றத்தில் கண்கள் திறந்த நிலையில் புதிய நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியக்க வைக்கிறது.உச்சநீதிமன்றத்தில் கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலை வைக்கப்படிருந்தது. அந்தச் சிலையானது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பார்க்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக கண்கள்…
தஞ்சையில் பௌர்ணமி கிரிவலம் தொடக்கம்
தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேக பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பௌர்ணமி கிரிவலம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று புரட்டாசி பௌர்ணமியான இன்று மீண்டும் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.தஞ்சை பெரிய கோவிலை சுற்றி சுமார்…




