• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

2 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

ByPrabhu Sekar

Dec 22, 2025

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில், பெருமளவு போதை பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகள்,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து,தனியார் பயணிகள் விமானம் ஒன்று,சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30,வயது, ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணி விசாவில்,தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, அவர் திரும்பி வரும் போது, தன்னுடைய சொந்த வட மாநிலத்திற்கு செல்லாமல், சென்னைக்கு வந்திருந்தார். இது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து அந்தப் வட மாநில பயணியை நிறுத்தி,தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இதை அடுத்து பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய சூட்கேசுக்குள், பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சந்தேகத்தில் அந்த உணவு பாக்கெட்டுகளை திறந்து பார்த்தபோது, அதனுள் ஹைட்ரோபோனிக் என்ற, பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த உணவு பாக்கெட் களில் மொத்தம் 2 கிலோ, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர். அந்த 2 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா, சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி.

இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், வட மாநில பயணியை கைது செய்து ரூபாய் 1 கோடி மதிப்புடைய, ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போது, இவர் கூலிக்காக போதை கடத்தும் கும்பலை சேர்ந்த, கடத்தல் குருவி என்று தெரிய வந்தது. எனவே இவரை இதே போல் கடத்தலில் ஈடுபடுத்திய, போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் யார்? என்று மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ரூபாய் 1 கோடி மதிப்புடைய, 2 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வடமாநில பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.