• Sat. Apr 27th, 2024

கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் பீட்டர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார் .இவ்விழாவிற்கு மேதகு ஆயர் குமார் ஜார்ஜ் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் ஸ்காட் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேம்ஸ் ஆர் டேனியல் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர்.


கல்லூரி விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான.கலப்பை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.பி.டி. செல்வகுமார் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது.நாளைய சமுகம் உங்களைத் தான் நம்பியிருக்கிறது.உங்களில் இருந்து தான் கல்விக் கண் திறந்த காமராஜர்,விஞ்ஞானி டாக்டர்.அப்த்துல் கலம் போன்ற தன்னலம் அற்ற மக்கள் நேசர்கள் உருவாக வேண்டும் என்ற போது.மாணவ,மாணவியர்கள் மத்தியில் இருந்து பெருத்த கை ஒலி எழும்பியது.இவ்விழாவில் சிறந்த பேராசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு கல்லூரி சார்பாக கௌரவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்லூரி விழாவில் பிளேஸ்மென்ட் ஆபிஸர் ராபர்ட் நன்றி கூறவே விழா இனிதே நிறைவுற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் அபிலாஷ் கல்லூரி இயக்குனர் டேவிட் பிலிப் டேனியல் மற்றும் கல்லூரி மேலாளர் மணிகண்டன் விழா ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *