• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோவிலில் 13வது ஆண்டாக அன்னதானம்

ByN.Ravi

Jul 17, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் ஆடிப்பெருந் திருவிழாவை முன்னிட்டு இளங்காளியம்மன் கோவில் தெரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக 13 ஆவது ஆண்டாக மாபெரும் அன்னதானம் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. அன்னதானத்திற்கு முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா தலைமை தாங்கினார். கிராம தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். அன்னதானத்தில் கிராம பொருளாளர் சங்கர் ஐயர் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பி பழனிவேல் இளைஞர்நற்பணி மன்ற தலைவர் பாலமுருகன் செயலாளர் அஜித் பொருளாளர் ராஜகுரு மற்றும் செல்வகுமார் பாலமுருகன் கீரை கண்ணன் இளங்கோ வெள்ளைச்சாமி மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சந்தானலட்சுமி சப்பானி அகமுடையார்சங்கத் தலைவர் கிருஷ்ணன் என்ற கிட்டு வெற்றி பாண்டியன் சேது உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக இளங்காளியம்மன் கோவிலில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பாகசிறப்பு பூஜைகள் நடைபெற்றது.