குஷிநகரில்,திருமண நிகழ்ச்சியின் போது,கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம்,குஷிநகர் மாவட்டத்தில்,நேற்று இரவு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியின் போது,அங்கிருந்த கிணற்றின்மீது இருந்த இரும்பு வளையத்தில் சிலர் நின்று கொண்டிருந்த நிலையில்,அவர்கள் கிணற்றில் தவறி விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிக பாரத்தால் இரும்பு வளையம் உடைந்து கிணற்றுக்குள் விழுந்தவர்களில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.மேலும்,இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவதாக குஷிநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]