2022-23 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.125 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.-மதுரை எம்.பி பேட்டி*
2022-23 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும் வங்கி நிர்வாகமும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன. கடந்த 13-11- 2022ஆம் நாள் மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.119 கோடி என்ற இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ.125.98 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 3122, இவர்களில் 2533 பேருக்கு 125.98 கோடி கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமஸ்ய கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 81% பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள கல்விக்கடனில் தேசியமயமாக்கப்பட்ட 12 வங்கிகள் 2166 மாணவர்களுக்கு ரூ.111.48 கோடி வழங்கியுள்ளன. 19 தனியார் வங்கிகள் 367 பேருக்கு ரூ.14.50 கோடி வழங்கியுள்ளன. கனரா வங்கி 468 மாணவர்களுக்கு ரூ.42.57 கோடி வழங்கியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 989 மாணவர்களுக்கு ரூ.32.80 கோடி வழங்கியுள்ளது. கூடுதல் முயற்சி எடுத்து அதிக கல்விக்கடன் வழங்கியுள்ள இந்த இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குக் கடன் வழங்கப்பட்ட சதவிகித அளவென்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 93% கடன் வழங்கியுள்ளன. ஆனால் தனியார் வங்கிகளோ 45%
விண்ணப்பங்களுக்கு மட்டுமே கடன் வழங்கியுள்ளன. இது குறித்து வங்கிகள் கூட்டத்தில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் ரூ.100 கோடிக்கு மேல் தரப்பட்டுள்ளது இது ஒரு சாதனை அளவாகும். இந்த ஆண்டு ரூ.125 கோடியையும் தாண்டி மாநிலத்தில் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேப்போல கல்விக்கடன் கேட்டு விண்ணாப்பித்தவர்களில் 81% பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் சிறந்த முன்னுதாரணம் ஆகும். இதற்காக தொடர்ந்து உழைத்திட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் வங்கிகள் நிர்வாகத்திற்கும் எனது பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக அதிக தொகையை கல்விக்கடனாக வழங்கியுள்ள சுனரா வங்கியின் சார்பில் துணைப்பொது மேலாளர் சுஜித் குமார் சாகு அவர்களையும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவின் சார்பில் முதன்மை மேலாளர் ராம்பிரசாத் அவர்களையும் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அளில் மற்றும் சந்தாண பாண்டியன் ஆகியோர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பாராட்டி கெளரவித்தார்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]