கோவை மாவட்டம் மாவுத்தம்பதி பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கொரானா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதுப்பதியில் குடியிருந்து வரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 30 குடும்பங்கள் ஏற்கனவே பட்டா பெற்று உள்ளன. மீதமுள்ள 15 குடும்பங களுக்கு பட்டா வழங்காமல் உள்ளது. இ;ந்நிலையில் அந்த 15 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சி முகமை மூலமாக இலவச வீடுகள் கட்டித்தர வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.