மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி இலங்கிபட்டியில் உள்ள பழமையான பிள்ளையார் கேnவில் உள்ளது அந்தக் கோவிலை இடிப்பதற்க்கு கிராமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் இந்து முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பின்னர் இந்து முன்னனி அழகர்சாமி செய்தியாளர்களிடம் கூறியது இலங்கிபட்டியில் பழமையான பிள்ளையார் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அதனை ஆக்கிரமிப்பு எனக்கூறி அரசு நிர்வாகம் அகற்றுவதற்கு முயற்சித்து வருவதால் அதனை கண்டித்து இந்து முன்னணியினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோயில் அகற்றும் எண்ணததை கைவிட வேண்டுமென கோரிக்கையை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.