• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது..,

ByS.Ariyanayagam

Jun 30, 2026

வேடசந்தூர் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,

பூத்தாம்பட்டி, டாஸ்மாக் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர் . அப்போது அவர் வேடசந்தூர் கோட்டைமந்தையை சேர்ந்த சுந்தரபாண்டி(29) என்று தெரியவந்தது. அபாயகரமான கத்தியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுந்தரபாண்டியை கைது செய்தனர்.