தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என, ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் 3 மாதங்களுக்கு மேல் நாட்கள் இருந்தாலும் கூட நாளை முதல் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி, இணையதளம் மூலம் 120 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 24-ம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. எனவே, 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்றே சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிடுவர்.
அதன்படி, அக்டோபர் 21-ம் தேதி பயணிக்க விரும்புவோர் நாளை (23-ம் தேதி) முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 22-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளை மறு தினம் (24-ம் தேதி) முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 23-ம் தேதி பயணிக்க விரும்புவோர் வரும் 25-ம் தேதி முன்பதிவு செய்யலாம்.இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியதாவது: ‘தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வோர் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.கொரோனா பாதிப்பு தற்போது குறைவாக இருப்பதால், வரும் தீபாவளிக்கு அதிகளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர் என எதிர்பார்க்கிறோம்.பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வருவதால், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் தரத்தை சமீபத்தில் உயர்த்தி உள்ளோம். தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைகர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து […]
- இன்று இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு பிறந்த தினம்இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று […]
- பெரம்பலூரில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர் வைத்த தி.மு.க பிரமுகர்..!பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேரங்கோடு கிராம சபைக் கூட்டம்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கையுன்னியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு […]
- கிருஷ்ணகிரி ஆணவக்கொலை..,
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம்..!கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன […] - புதுச்சேரியில் தண்ணீர் விழிப்புணர்வு குறித்த ‘வாட்டர் மேட்டர்ஸ் மேளா’..!ஒரு வருடத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.உலக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம். 1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.2) உங்களிடம் […]
- இன்று உலக வானிலை நாள்உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).உலக வானிலை நாள் ( World […]
- இன்று எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம்இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.பொருள் (மு.வ):கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள […]
- மதுரை திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் விபத்து – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்புமதுரை திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் பேரிகார்டு மீது டூவீலர் மோதி விபத்து., CCTV காட்சிகள் வெளியாகி […]
- மதுரையில் அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழாமதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வக்கீல் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா […]
- ஒரே நாளில் ஆளுநர் – அண்ணாமலை டெல்லி பயணம்தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடுபாஜக தலைவர் அண்ணாமலை அவசரபயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளனர்.இருவரின் பயணமும் […]
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் பலூன்கள் பறக்கவிட்டு கோசம் !எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மதுரையில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ; 500 பலூன்கள் பறக்கவிட்டு கோசமிட்டு […]