சேலம் மாநகர பெண் காவல்துறையினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி, உற்சாகமாக கொண்டாடிய மகளிர் தின கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெண்களை மதிக்கும் எண்ணம் வளர்ந்தால் போக்சோ வழக்குகள் குறையும் என சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி பேசும்போது
சேலம் மாநகர காவல் துறை சார்பில் இன்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது இதில் சேலம் மாநகரில் உள்ள பெண் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள்,பெண் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது. சேலம் மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் லாவண்யா, சேலம் வடக்கு காவல் துணை ஆணையர் மாடசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் காவல் ஆணையர் விஜயகுமாரி கேக் வெட்டி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதனைதொடர்ந்து மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி பேசும்போது ,ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர வேண்டும் என்ற வகையில் தான் மகளிர் தின விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
தற்போது அரசாங்கமே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அரசு பணிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெண்கள் இதனை பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களின் தியாகத்தை மட்டுமே நாம் கூறி வரும் ஆண்கள், அவர்களின் சுமையை குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் பெண்களை மதிக்க வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வீட்டில் பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு மரியாதை தர வேண்டும் என்பதை மற்ற குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தர வேண்டும் என்றும் பெண் குழந்தைகளின் மீதான மதிப்பு இளைஞர்கள் மத்தியில் வளரும் போது போக்சோ வழக்குகள் பெரும்பாலும் குறையும் என்றார்.ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் மீதான மதிப்பு பெருகும் போது பெண்களுக்கான பாதுகாப்பு தானாக வரும் என்றும் பெண் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கூறி பெற்றோர் வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வருவதற்கு ஆண்கள் தான் காரணம் என்று கூறியவர் இந்த மகளிர் தினத்தில் நாம் அனைவரும் ஆண்களுக்கு நன்றியை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பணி செய்யும் பெண்கள் தங்கள் குடும்பத்தையும், பணியையும் சரிசமமாக பாவித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டார்.
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைகர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து […]
- இன்று இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு பிறந்த தினம்இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று […]
- பெரம்பலூரில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர் வைத்த தி.மு.க பிரமுகர்..!பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேரங்கோடு கிராம சபைக் கூட்டம்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கையுன்னியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு […]
- கிருஷ்ணகிரி ஆணவக்கொலை..,
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம்..!கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன […] - புதுச்சேரியில் தண்ணீர் விழிப்புணர்வு குறித்த ‘வாட்டர் மேட்டர்ஸ் மேளா’..!ஒரு வருடத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.உலக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம். 1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.2) உங்களிடம் […]
- இன்று உலக வானிலை நாள்உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).உலக வானிலை நாள் ( World […]
- இன்று எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம்இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த […]