• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

காவிரி பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய், உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல் நடவடிக்கை மேற்கொள்வாரா?

ByKalamegam Viswanathan

Aug 5, 2026

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது.

இது குறித்து நீர்வளத்துறை அமைச்சரிடம் உங்கள் நிலைப்பாடு என்ன ,என்ன செய்யப் போறீங்க, சிஎம் சாருடன் நீங்களும் கர்நாடகா போறீங்களா என்றெல்லாம் அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சிரித்துக் கொண்டே காரில் சென்று விடுகிறார்.இது தான் த.வெ.க அமைச்சர்களின் பலரது நிலையாக உள்ளது.இதற்குமுதல்வர் விஜய்யின் மௌனமே பதிலாக இருக்கிறது .

தமிழக நீர்வளத்துறையின் கீழ் பாலாறு, பெண்ணையாறு ,காவேரி, பரப்பி குளம், வைகை, தாமிரபரணி, நம்பியாறு என 90 அணைகள் கீழ் 14,141 பாசன ஏரிகளும், உள்ளாட்சியை நிர்வாகத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் என இவைகள் மூலம் தான் உள்ளூர் வேளாண் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றன..

தென்மேற்கு பருவமழை இயல்பு மழை அளவான 126.8 மில்லி மீட்டரை விட 14 சதவீதம் குறைவாக 108.4 மில்லிமீட்டர் மழை அளவு மட்டுமே பெய்துள்ளது. மாநில முழுமைக்கான அணைகளின் கொள்ளளவு இந்த ஆண்டு 31.4 சதவீதம் குறைந்துள்ளது ஒட்டுமொத்த அளவான ரெண்டு லட்சத்து 24,000 கன அடியில் இப்பொழுதுவெறும் 70 ஆயிரத்து 439 கன அடியாக குறைந்துள்ளது இப்போது அணைகளில் நீர்மட்டத்தில் 53 சதவீதம் கீழ் குறைந்துள்ளது. இது குறித்து அமைச்சர் எதுவும் பதில் கூறவில்லை

தற்போது அரிசி விலை உயர்ந்து கொண்டே வருகிறது கடந்த 30 நாட்களில் ஒரு மூட்டை அரிசி விலை 300 ரூபாய் முதல் 400 ரூபாயாக விலை உயர்ந்து விட்டது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்ற அரிசி தற்போது 66 ரூபாய்க்கு விற்கிறது.1600 ரூபாய்க்கு விற்ற சன்னரக அரிசி இப்போது 1750 ரூபாய்க்கு இருக்கிறது இன்னும் சில வாரங்களில் ஒரு மூட்டை 2000 ரூபாயாக உயரஸவாய்ப்பு .இந்த நிலையிலே தான் யார் என்ன பேசினாலும் எதை பேசினாலும் எப்படி பேசினாலும் எவ்வளவு பேசினாலும் என்ன நடந்தாலும் நம்ம சி.எம் சாருக்கு கோபமே வராது.

ஆனால் குலவிளக்கான பெண்களை இழிவு படுத்தி மட்டும் யாராவது தமிழ்நாட்டில் மூச்சு விட்டாலே போச்சு அவ்வளவுதான் தமிழ்நாடு பற்றி எரிந்தாலும் சரி, ரத்த சொட்ட சொட்ட போராட்டம் நடந்தாலும் சரி ,தமிழ்நாடே போராட்ட களமாக மாறினாலும் சரி, பாராளுமன்றத்திலே போராட்டம் நடத்தினாலும் சரி , நம்ம சிஎம் சார் போட்ட உத்தரவால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது சும்மா கிளுகிளுத்து போச்சு.

நம்ம சிஎம் விஜய் பார்க்கத்தான் அமைதியா இருப்பாரு ,அமைதியா இருக்காருன்னு எவனாவது நினைச்சா அவன் முட்டாளா போய்விடுவான். .அப்புறம் அவரையே அவர கண்ட்ரோல்ல கொண்டுவர முடியாது அதுதான் நேற்று தமிழ்நாடு பார்த்தது.
அவருடைய அதிகாரத்திற்கும், அதிரடிக்கும் என்டே கிடையாது

விஜய்க்கு கோவம் வராது கோவம் வந்துச்சுன்னா என்ன நடக்கும் என்பது தான் நேத்து தமிழ்நாடு பார்த்துச்சு இந்தியாவே பார்த்துச்சு இது சும்மா சாம்பிள் தான் சும்மா ட்ரைலர் தான். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை தமிழ்நாட்டில் அதிர்ந்து பார்த்தது தெரியுமா?நீங்க நேத்து காட்டிய வேகம் தஞ்சாவூர் இருந்து இரவோடு, இரவாக காவல் துறையை ஒட்டுமொத்தமாக சென்னைக்கு சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரைக்கும் தேர்தல் பிரச்சார பவனி போல உதயநிதி ஸ்டாலின் அழைச்சிட்டு போன கண்றாவி காட்சிகள் பார்த்தோம்.

இங்கு அணை நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது, அரிசி விலை உயர்ந்து கொண்டு வருகிறது, காவிரியில் தண்ணீர் கொடுக்க வில்லை, முதலமைச்சர் வேகமாக நடவடிக்கை எல்லா நேரத்திலும் எல்லா முக்கிய பிரச்சினைகளுக்கும் காட்டுவாரா என்பது தன் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு.

மொத்தத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மொத்தத்தில் காவேரி தண்ணீக்காக சண்டை போடுறாங்க என்று எதிர்பார்த்தா திரிஷா அண்ணிக்காக சண்டை போடுறார்கள் இது தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு.
என்று மக்கள் தலையில் அடித்துக் கொள்கிற காட்சி தான் நடைபெறுகிறது என கூறினார்.