பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டாராம். இந்த வாரம் அவர் தொகுத்து வழங்க போவது தான் கடைசி எபிசோட் என தகவல் பரவி வருகிறது. இதனால் அவருக்கு பதிலாக இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 2017 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நிறைவடைந்தது. பிக்பாசின் ஐந்து சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடியில் 24 மணி நேர நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் வார இறுதி நாட்களில் மட்டும் கமல் வரும் எபிசோட்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்கள், குறிப்பாக வனிதா விஜயக்குமார் செய்யும் தவறுகளை கமல்ஹாசன் கேள்வி கேட்பதில்லை என்றும், போட்டியாளர்கள் இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதையும் கமல்ஹாசன் கட்டுப்படுத்தவில்லை என கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக போவதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 துவங்குவதற்கு முன்பும், கமல் அரசியலில் பிசியாக இருப்பதாக அவர் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வர மாட்டார் என கூறப்பட்டது.இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் கமல்ஹாசன்பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கமலுக்கு ஹாசனுக்கு பதில் இனி யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளதுவனிதாவின் ஆட்டம் தான் ஆரம்பம் முதலே ஓவராக இருந்து வருவதால் அவரை சமாளிக்கக் கூடிய ஒரே ஆள் ரம்யா கிருஷ்ணன் தான் என்பதால் பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்க வருவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக வந்து வனிதாவை தெறித்து ஓட வைத்தார். அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனால் அவர் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறதுஅதே சமயம் மற்றொரு தகவலாக சரத்குமார் அல்லது சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலம்பரசன் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்றுபலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாசை அடுத்து தொகுத்து வழங்க போகிறவர் யார் என நெட்டிசன்கள் பலரின் பெயரை யூகித்து வந்தாலும், கமல்ஹாசன் இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என கூறப்படுவதே வதந்தி தான் என சொல்லப்படுகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை துவக்கும் போது பிக்பாஸ் எந்த வெர்சனாக இருந்தாலும் தான் வருவேன் என்றும், மக்களிடம் தனது கருத்துக்களை முன்வைக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தான் தவற விட போவதில்லை என்றும்கூறி இருந்தார். அதனால் பரபரப்பிற்காக இது போல் வதந்திகள் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது.
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]