தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படைப்பாக பார்க்கப்படும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம், லைகா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்து இயக்கியுள்ளார். மிகப்பெரும் பொருட்ச்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்தப் திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கின்றனர்.

இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸாக இருக்கும் நிலையில், தன்னுடைய கனவு திரைப்படமான ‘மகாபாரதம்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராஜமௌலி. இந்தியாவின் ஸ்டார் இயக்குநராகவும், பிரம்மாண்டத்தை கட்டியெழுப்புபவராக இருக்கும் ராஜமௌலி, ஆர்ஆர்ஆர் திரைப்படம் மூலம் புதிய உட்சத்துக்கு சென்றுள்ளார். அவரது இயக்கத்தில் ஏற்கனவே வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கும் நிலையில், அடுத்ததாக அப்படியான பிரம்மாண்ட படைப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அவரது கனவு திரைப்படம் என்றால் ‘மகாபாரதம்’ தான். இதனை பலமுறை தன்னுடைய பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது கைவசம் 3, 4 படங்கள் இருப்பதால், அந்தப் படங்களின் சூட்டிங்கை முடித்துவிட்டு ‘மகாபாரதம்’ படத்திற்கான பணிகளை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இந்தியளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக அந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதுவரை எடுக்கப்பட்ட படங்களை விட புதிய பிரம்மாண்டத்தின் உட்சமாக மகாபாரதத்தை எடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசும்போது, “மகாபாரதம் படம் என்னுடைய கனவு திரைப்படம். அதனை கைவிட வில்லை. மகாபாரதம் படத்தை உருவாக்க அதிக நேரம் மற்றும் நீண்ட நாட்கள் பணியாற்ற வேண்டியிருக்கும். அதற்கான தயாரிப்புகளும் மிக மிக பெரியது. இப்போது கைவசம் 4 படங்கள் இருக்கின்றன. அந்தப் பணிகளை முடித்தவுடன் நிச்சயம் மகாபாரதம் படத்தை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழில் பொன்னியின் செல்வன் வர இருக்கும் நிலையில் ராஜமௌலி மகாபாரதம் அப்டேட் கொடுத்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […] - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் […]
- நத்தம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.நடைபெற்ற இந்த கும்பாபிஷேக […]
- மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்