




காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என்ற கட்சிகளில் உள்ள கோஷ்ட்டி சலசலப்பை போக்கதான். தமிழகத்தில் சின்ன மாவட்டமான கன்னியாகுமரியில் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்கள் தோன்ற காரணம். தமிழகத்தில், குமரி காங்கிரஸ் மாவட்டம் என்ற நிலை, அன்றிலிருந்து, இன்று வரை தொடர்கிறது.
காங்கிரஸ்_திமுக கூட்டணி இருந்த காலத்தில் எல்லாம். அதிமுக, பாஜக தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியையே சந்தித்தது.


கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது. குமரியில் காங்கிரஸ் போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று.(குமரி காங்கிரஸ் கோட்டை என்பதை நிருபித்தது) காங்கிரஸ், திமுக கூட்டணியில். பத்மநாபபுரம் தொகுதியை இரண்டாவது முறையாக மனோ தங்கராஜ் தக்கவைத்துக் கொண்டார். கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளை அதிமுக, பாஜக வெற்றி பெற்றதால், குமரியில் மனோ தங்கராஜ் ஒருவரே வெற்றி பெற்றதால். எந்த கேள்வி, பதிலும் இல்லாமல் மனோ தங்கராஜ் எவ்வித தடைக்கல்லும் இல்லாமல், அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.
அடுத்து வந்த நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில், திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி உரசல்கள்.குமரி திமுகவில் அதிரடி மாற்றம், அதன் பின் அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ் திடீர் மாற்றம்.அதன்பின் குமரி அரசியலில், அரசின் அங்கிகாரம் பதவியான “மேயர்”பதவியில் இருந்தவர் மகேஷ் ஒருவர் மட்டுமே.
தமிழக அமைச்சரவையில் குமரிக்கு பிரதிநிதிகள் ஏன் இல்லை என்ற கேள்வி பெரிதாக ஒலித்தது.

ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25_ஆண்டுகள் நிறைவு விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த நேரத்தில். கிறிஸ்தவ மதத்தின் அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஆயர்களும் முதல்வரை சந்தித்து வைத்த ஒற்றை கோரிக்கை, திமுகவிற்கு சட்டமன்ற உறுப்பினர் இருந்தும் ஏன் அமைச்சர் இல்லை என்ற கேள்வியோடு வைத்த கோரிக்கை.
அய்யா வழி பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார் அண்மையில் செய்தியாளர்களை அழைத்து முதல்வருக்கு வைத்த கோரிக்கையோடு எழுப்பிய கேள்வி,
குமரி சார்பில் அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ்யை
அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ்யை மாற்றியதற்கு என்ன காரணம்? என்பதை இதுவரை முதல்வர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.
மாவட்ட அமைச்சராக தங்கம் தென்னரசுக்கு நாங்கள் எவரும் வாக்களிக்கவில்லை.எந்த உரிமையில் நாங்கள் சந்தித்து கோரிக்கை வைக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

குமரி அரசியலில் கடந்த சில நாட்களாக, அதுவும் சுரேஷ் ராஜனுக்கு அரசு சார்ந்த பதவியை அடுத்து, குமரி திமுகவினர் மத்தியில் எழுந்த கருத்து,அதிமுக, பாஜக கூட்டணி எதிரொலி, குமரியில் திமுகவை இப்போது உள்ள நிலையில் வலுப்படுத்தும் வகையில், மனோ தங்கராஜ்யை அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரிடம் தொடர்ந்து வைக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவை மாற்றம் .புதிதாக ஒருவரை அமைச்ராக்குவதை விட. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோதங்கராஜ்யை மீண்டும் அமைச்சரவையில் இணைக்கமுடிவெடுத்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலை நோக்கு பார்வையும், அரசியல் சாணக்கியமும், அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

