இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் படத்தின் தலைப்பு சம்பந்தமாக பஞ்சாயத்துக்கள் ஏற்படுவதில்லை ஆனால் தமிழ் சினிமாவில் தலைப்பை பதிவு செய்துவிட்டு படமே எடுக்காமல் தலைப்புக்களை காலவரம்பு இன்றி சங்கங்களில் மறு புதிப்பு மூலம் வேறு யாரும் அந்த தலைப்புக்களை பயன்படுத்த முடியாமல் தடைக்கற்களாக இருந்து வருகின்றனர் சிலர் இதற்கு சங்க நிர்வாகிகளும் உடந்தையாக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை அதுபோன்ற சம்பவம்தான் காமன்மேன் படத்தலைப்பு விஷயத்திலும் நடந்துள்ளது.
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் காமன்மேன் (Common Man) என்கிற படத்தின் அறிமுகமுன்னோட்ட போஸ்டர் அண்மையில்வெளியானது.இந்தப் படத்தை செந்தூர்ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது.இந்நிலையில் இந்தத் தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் (AGR RIGHT FILMS) என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் முறையீடு செய்துள்ளது.அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆம் ஆண்டு காமன்மேன் என்கிற தலைப்பு தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் இதே போல காமன்மேன் என்று ஒரு பட வேலையை முன்னெடுக்க அப்போதும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதன் பின்னர் விஷால் தன் படத்தலைப்பை மாற்றிக் கொண்டார்.தற்போது, செந்தூர்ஃபிலிம்ஸ்இண்டர்நேசனல் (CHENDUR FILMS INTERNATIONAL) காமன்மேன் என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் நாயகனாக நடிக்கும் நடிகர் சசிகுமாரிடம், ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தினர் தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்துச் சொல்லியிருக்கிறார்கள்.அவரோ, எதுவானாலும் ஃபிலிம் சேம்பர் வழியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பின்னர், இது தொடர்பாக ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம், ஃபிலிம் சேம்பரை அணுக, சேம்பரோ தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கமும் இந்தத் தலைப்பை செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துக்குத் தவறுதலாக வழங்கிவிட்டதாக பதிலளித்துள்ளது.இதை எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் சான்றாக ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்திடம்கேட்டிருக்கிறது.தயாரிப்பாளர்கள் சங்கமும் இதோ தருகிறோம் அதோ தருகிறோம் என்று நாட்களைக் கடத்தியுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடிதத்துக்காக ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் செந்தூர் ஃபிலிம்ஸ் நிறுவனம் காமன்மேன் என்கிற தலைப்பில் டீசர் வெளியிட்டுவிட்டது.
அதிர்ச்சியடைந்த ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஃபிலிம் சேம்பரை மீண்டும் அணுகியதாம். சேம்பருக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்றும் இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என ஃபிலிம்சேம்பர் கூறியிருக்கிறது.அதனால் இப்போது ஏஜிஆர் ரைட் நிறுவனம், காமன்மேன் என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் என செந்தூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும், இந்தத் தலைப்பில் வெளியான டீசரை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கிவிடுமாறு திங்க் மியூசிக் நிறுவனத்துக்கும், இந்தத் தலைப்பில் தங்களைத் தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிச்சான்று வழங்கக் கூடாது என்று தணிக்கைக்குழுவுக்கும் சட்ட ரீதியானநோட்டீஸ்அனுப்பியுள்ளதாம்என்ன நடக்கப்போகிறதெனப் பார்ப்போம்.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: