இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது.

முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய கருணாநிதி MP, “இந்த மேடையில் இசைக்கப்படும் இசை அடக்கமறு என்பதை பறைசாற்றும் வகையில் இருக்கிறது. இரஞ்சித் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் பேசும்பொழுது, “இரஞ்சித் ரீல் இல்லை ரியல்” என்று வாழ்த்தினார்.
நிறைவாக பேசிய தொல். திருமாவளவன் MP,
“சகோதரன் பா.இரஞ்சித் பண்பாட்டுதளத்தில் மிக நுட்பமாக தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் . நீலம் பண்பாட்டு மையம் நிகழ்த்திவரும் இசைவடிவம் எதிர்ப்பின் இசைவடிவமல்ல இதுவே ஆதி இசைவடிவம் , இதுவே இந்த மண்ணின் இசை. எங்கோ ஓர் பெயர் தெரியாத ஊர்களில் பாடிக்கொண்டு அறியப்படாத கலைஞர்களாக வாழ்ந்து வந்தவர்களை அழைத்து வந்து இப்படிப்பட்ட ஒரு மேடையை அமைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தையும், நலிந்த கலைஞர்களுக்கு பொருளுதவியையும் அளித்துவரும் இயக்குனர் இரஞ்சித்தை பாராட்டுகிறேன்.
இயக்குனர் பா. இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்க்கும்” என்றார்.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]