தேனி மாவட்டத்தில் களையிழந்து வரும் ‘புளி கொட்ரை’ குடிசை தொழிலால் பல ஆயிரம் பெண்கள் வேலையிழந்து தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ‘புளி கொட்ரை’ எனப்படும் குடிசை தொழில் களை கட்டியது. இதனால் தேனி. கம்பம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பெண்கள் சுறுசுறுப்புடன் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பல ஆயிரம் குடும்ப பெண்கள் சத்தமில்லாமல் வருவாய் ஈட்டி வந்தனர். இதற்கு முழு காரணம் அப்போது, மதுரை-தேனி, தேனி-கம்பம், தேனி-போடி, தேனி-பெரியகுளம் மெயின் ரோட்டின் இரு புறங்களிலும் குடை போல் அகன்று விரிந்து, கண்ணுக்கெட்டுன துாரம் வரை வானுயர்ந்த புளியமரங்கள் அணிவகுத்து இருந்தன.
இதனால் புளி வரத்தும் அதிகம் காணப்பட்டன. பல ஆயிரம் குடும்ப பெண்கள் வீட்டில் இருந்தபடியே, புளியை தட்டி சுத்தம் செய்து, பாக்கெட் போட்டு கொடுத்தனர். இதன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதித்தனர். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு காணப்பட்டது. காலப்போக்கில், ரோடு விஸ்தரிப்பு காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற மரங்கள் அடியோடு அழிந்து போயின. அதோடு ‘புளி கொட்ரை’ எனப்படும் குடிசை தொழிலும் நாளுக்கு நாள் நலிவடைந்து வந்தது.
தேனியை சேர்ந்த மாரியம்மாள் 62, கூறுகையில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக புளி தட்டி வருகிறேன். இத்தொழிலை தவிர வேறு வேலை தெரியாது. இத்தொழில் பல பெண்களை வாழவைத்தது, தற்போது புளி தட்டுதலில் ஆர்வம் குறைந்து விட்டது. ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில புளி மட்டுமே வருகிறது. 100 பேர் வேலை செய்த இடத்தில் 10 பேர் கூட இல்லை. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இத்தொழில் முற்றிலும் அழிந்துவிடும்” என்றார்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]