• Thu. Apr 25th, 2024

செல்வம் குவிய.. வெள்ளிக்கிழமை வழிபாடு!

சிலருக்கு வருமானம் நல்ல வகையில் இருந்தபோதிலும், செலவு அதிகமாக இருக்கும்! வருமானம் வீண் விரயமாகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன பரிகாரம் செய்யலாம்?

சுக்கிர யோகம் வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். அதாவது இந்த தீபத்தை சுக்கிர ஹோரையில் வீட்டில் ஏற்றினாலே போதும். வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் ஒரு சிறிய துண்டு வெட்டிவேரை எடுத்துக் கொள்ள வேண்டும். தீபமேற்றும் திரியையும், இந்த வெட்டிவேரையும் ஒன்றாக இணைத்து சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தீபத்தில் நெய் ஊற்றி தயார் செய்து, இந்த வெட்டிவேர் திரியை வைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு மாதுளம்பழத்தை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.

அதன் பின்பு எப்போதும் போல வீட்டில் இருக்கும் மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வழிபட வேண்டும். குறிப்பிட்ட இந்த வெட்டிவேர் தீபத்தை ஏற்றி வைத்து அதில் எரியும் தீபச்சுடரை பார்த்து, வேண்டுதலை வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும். மூன்று வாரம் தொடர்ந்து சுக்கிர ஹோரையில் வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றினால் நிச்சயம் வாழ்வில் நம்ப முடியாத சில நல்ல மாற்றங்கள் நிகழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *