-தமிழ்நாடு மக்களிடம் இருந்து ஆட்சி, அதிகாரம் வழங்குவதில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என JDS தேசிய தலைவர் தேவகவுடா கூறியுள்ளார்…
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் பெங்களூருவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளான காங்கிரசோ, பாஜகவோ ஆட்சி செய்யவில்லை – அவர்களை அம்மண்ணின் கட்சிகளே ஆளுகின்றன…மொழி, இனப் பற்றினை பற்றி நாம் அவர்களிடம் கற்க வேண்டும்’ என்றார்…