தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வார இறுதி நாட்களில் கோவிலை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது……
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவில் நடை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் வழிபாட்டு தலங்களை கட்டுப்பாடுகளை பின்பற்றி திறக்க அனுமதி அளிக்கக்கோரி, நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.ஆனால் அரசு தடையின் காரணமாக கோவிலில் வழிபட அனுமதி இல்லாமல் உள்ளது.மற்ற அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகளை பின்பற்றி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் கோவில் வழிபாட்டு தலங்களுக்கும்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.